மட்டக்களப்பில் ஆலயத்திற்கு சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

Batticaloa Sri Lanka Police Investigation Eastern Province
By Laksi Jul 23, 2024 12:05 PM GMT
Laksi

Laksi

மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சடலமானது தாந்தாமலை காட்டுப் பகுதியில் இன்று (23) மீட்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவத்தில் 39ஆம் கிராமம் செல்வாபுரத்தைச் சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான செல்வநாயகம் லிங்கேஸ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

காட்டின் மலைப் பகுதியில் சடலம்

உயிரிழந்த நபர் கடந்த ஞாயிறுக்கிழமை தனது வீட்டிலிருந்து தாத்தாமலை முருகன் ஆலயத்திற்கு போவதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பாத நிலையில் குடும்பத்தினர் ஆலயத்தை அண்டிய பகுதியில் அவரை தேடிக் கொண்டிருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பில் ஆலயத்திற்கு சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு | Family Man Recovered From Bodies In Batticaloa

இந்தநிலையில், கால்நடைகளை பராமாரிப்பதற்கு சென்ற ஒருவர் காட்டின் மலைப் பகுதியில் சடலம் ஒன்று காணப்பட்டதாக தகவல் வழங்கியதன் அடிப்படையில் பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW