கடவுச்சீட்டு சேவை தொடர்பில் வெளியான அறிவித்தல்
Sri Lanka
Immigration
Department of Immigration & Emigration
Passport
By Rakshana MA
கடவுச்சீட்டு பெறுவது தொடர்பில் அறிவித்தல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, ஒரு நாள் சேவையில் கடவுச்சீட்டு விநியோகம் செய்தல் மற்றும் சாதாரண கடவுச்சீட்டு வழங்கும் செயல்முறைகள் ஆகியன மட்டுப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளியிட்டுள்ள அறிவிப்பு
இது தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், குறித்த சேவைகள் மே 5, 6 மற்றும் 7ஆம் திகதிகளில் மட்டுப்படுத்தப்படும்.
அதேவேளை, ஒரு நாள் சேவைக்காக இயக்கப்பட்ட 24 மணி நேர சேவை குறித்த நாட்களில் இயங்காது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பணிகள் காரணமாகவே இந்த சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |