நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை : நூறுக்கும் மேற்பட்டோர் கைது

Police spokesman Sri Lanka Police Sri Lanka Sri Lankan Peoples
By Rakshana MA May 03, 2025 11:25 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கை முழுவதும் நேற்றைய தினம்(02) விசேட சுற்றிவளைப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது 353 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், குறித்த சந்தேகநபர்கள் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மக்களுக்கான டிஜிட்டல் அடையாள அட்டை

இலங்கை மக்களுக்கான டிஜிட்டல் அடையாள அட்டை

விசேட சுற்றிவளைப்பு

அதன்படி, ஹெரோயின் போதைப்பொருளுடன் 102 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 143 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 100 பேரும், கஞ்சா செடிகளுடன் 04 பேரும் போதை மாத்திரைகளுடன் 04 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை : நூறுக்கும் மேற்பட்டோர் கைது | Special Roundup Operation In Sri Lanka

இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, 186 கிராம் 353 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 337 கிராம் 226 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 10 கிலோ 470 கிராம் 380 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளும், 162 போதை மாத்திரைகள், 25367 கஞ்சா செடிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு

உயரும் வெப்பநிலை : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

உயரும் வெப்பநிலை : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW