மட்டக்களப்பில் தமிழ் பொது வேட்பாளர் கூட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பிரசாரம் முன்னெடுப்பு

Batticaloa Eastern Province sri lanka presidential election 2024
By Laksi Sep 16, 2024 12:43 PM GMT
Laksi

Laksi

மட்டக்களப்பு - கல்லடியில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் பா.அரியேந்திரனின் கூட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் இரா. துரைரெட்ணம் உட்பட குழுவினர் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த பிரசார நடவடிக்கையானது நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரன் தலைமையில் இன்று (16) மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாளை (17) பிற்பகல் 3 மணிக்கு கல்லடியில் உள்ள மீன் பூங்காவிற்கு அருகிலுள்ள மைதானத்தில் ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் பா.அரியேந்திரனின் மாபெரும் பிரசார கூட்டம் இடம்பெறவுள்ளது.

யுக்திய நடவடிக்கையில் ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் கைது

யுக்திய நடவடிக்கையில் ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் கைது

மக்களுக்கு அழைப்பு

இந்த கூட்டத்திற்கு மக்களை வருமாறு அழைப்பு விடுத்து  ரேலோ கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கோ.கருணாகரன். ஈ.பிஆர்.எல்.எப் கட்சி முக்கியஸ்தரும் கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினருமான இரா, துரைரெட்ணம், கிழக்கு மாகாண முன்னாள் பிரதி தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா மற்றும் கட்சி ஆதரவாளர்கள் கொண்ட குழுவினர்இந்த பிரசார நடவடிக்கையை ஆரம்பித்து வைத்தனர்.

மட்டக்களப்பில் தமிழ் பொது வேட்பாளர் கூட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பிரசாரம் முன்னெடுப்பு | P Ariyanethranelection Campaign Batticaloa

இதனையடுத்து மக்களிடம் சங்கு சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கோரியும் நாளை இடம்பெறவுள்ள கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தும் துண்டுப்பிரசுரங்களை மக்களுக்கு விநியோகித்தனர்.

வவுனியாவில் ஜனாதிபதி தேர்தல் கடமைகளுக்காக களமிறக்கப்பட்டுள்ள 1500 பொலிஸார்

வவுனியாவில் ஜனாதிபதி தேர்தல் கடமைகளுக்காக களமிறக்கப்பட்டுள்ள 1500 பொலிஸார்

இலங்கை தமிழரசு கட்சி சஜித்திற்கு ஆதரவு

இலங்கை தமிழரசு கட்சி சஜித்திற்கு ஆதரவு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW