வாழைச்சேனையில் மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

Batticaloa Sri Lankan Peoples Eastern Province
By Rakshana MA May 19, 2025 05:14 AM GMT

பாடசாலை மாணவன் ஒருவன் நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (18) வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்தியாற்றுப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தால் பாகிஸ்தானுக்கு விதிக்கப்பட்ட 11 கடும் நிபந்தனைகள்

சர்வதேச நாணய நிதியத்தால் பாகிஸ்தானுக்கு விதிக்கப்பட்ட 11 கடும் நிபந்தனைகள்

முதற்கட்ட விசாரணை

நண்பர்களுடன் சேர்ந்து சந்தியாற்று நீரோடையில் குளித்துக் கொண்டிருக்கும்போதே மாணவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

வாழைச்சேனையில் மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு | One Person Has Drowned In Valaichchenai

இவ்வாறு மரணமடைந்தவர் ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் உயர்தரத்தில் கணிதப் பிரிவில் கல்வி கற்று வரும் மாணவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இன்றைய நாளுக்கான வானிலை மாற்றம்

இன்றைய நாளுக்கான வானிலை மாற்றம்

மட்டக்களப்பில் சுவாமி விபுலானந்த அடிகளாரின் கற்சிலை திறந்து வைப்பு!

மட்டக்களப்பில் சுவாமி விபுலானந்த அடிகளாரின் கற்சிலை திறந்து வைப்பு!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW  


GalleryGalleryGallery