கொழும்பில் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு

Colombo Sri Lanka Police Investigation Crime
By Laksi Oct 05, 2024 09:31 AM GMT
Laksi

Laksi

கொழும்பு - புறக்கோட்டை பகுதியில் அடையாளம் தெரியாத நபரின் கத்துக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவமானது புறக்கோட்டை என்.எச்.எம் அப்துல் காதர் வீதியில் நேற்று (4) இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் கொழும்பு துறைமுகத்தில் கடமையாற்றும் மஹியங்கனை பகுதியை சேர்ந்த 33 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஐஎம்எப் உடன் வெற்றிகரமாக நிறைவுபெற்ற பேச்சுவார்த்தை: நிதியமைச்சு

ஐஎம்எப் உடன் வெற்றிகரமாக நிறைவுபெற்ற பேச்சுவார்த்தை: நிதியமைச்சு

மேலதிக விசாரணை

குறித்த நபர் வீதி ஓரமாக நடந்து சென்றுக் கொண்டிருந்த போது, அவருக்கு பின்னால் வந்த நபர், அவரை திடீரென கூரிய ஆயுதத்தால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

கொழும்பில் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு | One Person Died After Being Stabbed In Colombo

தாக்குதலுக்கு இலக்கான நபரை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புறக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வேட்பு மனுத்தாக்கல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவல்

வேட்பு மனுத்தாக்கல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவல்

சிறுவர்களிடையே பரவும் காய்ச்சல் : எச்சரிக்கும் மருத்துவர்கள்

சிறுவர்களிடையே பரவும் காய்ச்சல் : எச்சரிக்கும் மருத்துவர்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW