புத்தளத்தில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

Puttalam Sri Lanka Police Investigation Crime
By Laksi Sep 02, 2024 09:07 AM GMT
Laksi

Laksi

புத்தளம்- கற்பிட்டி பகுதியில் ஒரு கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கேரள கஞ்சா கற்பிட்டி, குறிநப்பிட்டி மற்றும் சின்னக்குடியிருப்பு பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடற்படை மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கெப் வாகனம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 800 கிராம் கேரள கஞ்சா முதலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டிலுள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மேலதிக சட்ட நடவடிக்கை

இதனை தொடர்ந்து வாகன உரிமையாளரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், மேலும் 200 கிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

புத்தளத்தில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது | One Person Arrested With Kerala Ganja In Puttalam

இதன்போது, கட்பிட்டி , சின்னக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்தவ 56 வயதுடைய வாகனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து,கைப்பற்றப்பட்ட  கேரள கஞ்சா, வாகனம் மற்றும் சந்தேகநபரை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக  கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.

இலங்கையில் வீழ்ச்சி கண்டுள்ள தங்கத்தின் விலை

இலங்கையில் வீழ்ச்சி கண்டுள்ள தங்கத்தின் விலை

மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்

மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW