ஜனாதிபதியின் நியமனங்களில் குளறுபடிகள்

SJB Ajith Perera Anura Kumara Dissanayaka
By Kamal Sep 30, 2024 12:43 AM GMT
Kamal

Kamal

புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் நியமனங்களில் குளறுபடிகள் காணப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவி ஏற்றதன் பின்னர் மேற்கொள்ளும் அனைத்து நியமனங்களிலும் குளறுபடிகள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

வங்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

வங்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

நீதிமன்றில் வழக்கு 

நியமிக்கப்பட் சிலரது நடத்தைகள் தொடர்பில் பிரச்சினைகள் காணப்படுவதாகவும், சிலர் நீதிமன்றங்களினால் தண்டிக்கப்பட்டவர்கள் எனவும், சிலருக்கு ஏதிராக நீதிமன்றில் வழக்கு விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதியின் நியமனங்களில் குளறுபடிகள் | Npp Posting Not Fair Says Sjb

எனவே நாடாளுமன்றத் தேர்தலின் போது தற்பொழுது தேசயி மக்கள் சக்திக்கு கிடைக்கப் பெற்ற 42 வீத வாக்குகள் குறைவடையும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் திட்டங்களை அப்படியே முன்னெடுக்கக் கூடிய நபர்கள் தேசிய மக்கள் சக்தியில் இருக்கின்றார்கள் எனவும், அநுரகுமார என்றால் ரணில் எனவும் ரணில் என்றால் அநுரகுமார எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாணந்துறை பகுதியில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். 

வங்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

வங்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

அதிகளவில் மின்னல் தாக்கம்! அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்

அதிகளவில் மின்னல் தாக்கம்! அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW