முன்னாள் எம்.பிக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு

Parliament of Sri Lanka Sri Lanka Sri Lankan Peoples
By Rukshy Oct 09, 2024 04:10 AM GMT
Rukshy

Rukshy

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் இலவச முத்திரைகள் குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தபால் திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் 5 இலட்சம் ரூபா பெறுமதியான இலவச முத்திரைகளில் பயன்படுத்தப்படாதவற்றை அருகில் உள்ள தபால் அலுவலகத்தில் அல்லது நாடாளுமன்றத்தில் ஒப்படைக்குமாறு தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.

விவசாயிகளுக்கான உர மானியம் குறித்து விஜித ஹேரத் வெளியிட்ட தகவல்

விவசாயிகளுக்கான உர மானியம் குறித்து விஜித ஹேரத் வெளியிட்ட தகவல்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வசதிகள்

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து, இம்முத்திரைகளைப் பயன்படுத்துவதற்கு தடையென  தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முன்னாள் எம்.பிக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு | Notice Issued To Former Mps

இந்நிலையில், குறித்த முத்திரைகளை செல்லுபடியற்றவையாக கருதப்பட வேண்டுமென, நாட்டில் உள்ள அனைத்து தபால் நிலையங்களுக்கும் தபால் மா அதிபர் அறிவித்துள்ளார்.

இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வருடாந்தம் ரூ. 5 இலட்சம் பெறுமதியான முத்திரைகள் இலவசமாக வழங்கப்படும் என்பதோடு, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அனைத்து வசதிகளும் இல்லாமலாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.  

சம்மாந்துறை மக்கள் முஸ்லிம் காங்கிரஸை ஆதரிக்க தயார் : மாஹிர் தெரிவிப்பு

சம்மாந்துறை மக்கள் முஸ்லிம் காங்கிரஸை ஆதரிக்க தயார் : மாஹிர் தெரிவிப்பு

பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை

பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW