ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி வசமான அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் பதவி!

Ampara Srilanka Muslim Congress Sri Lankan Peoples Eastern Province Political Development
By Rakshana MA Jul 03, 2025 09:08 AM GMT
Rakshana MA

Rakshana MA

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய தவிசாளராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர் எ.எஸ்.எம்.உவைஸ் உட்பட உப தவிசாளராக தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் முகம்மட் பாரூக் றஜீத்தும் தெரிவாகியுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய தவிசாளர் மற்றும் உப தவிசாளர் பதவிக்கு தெரிவு செய்வதற்கான கூட்டம் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரும் தலைமை தாங்கும் அதிகாரியுமாகிய ஆதம்லெப்பை முகம்மது அஸ்மி தலைமையில் சபை மண்டபத்தில் நேற்று (02) மாலை நடைபெற்றது.

இதன்போது புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்கான பல்வேறு கட்சிகளையும் சேர்ந்த 18 உறுப்பினர்கள் கூட்ட மண்டபத்தில் சமூகமளித்திருந்தனர்.

தங்கம் வாங்கவுள்ளோருக்கு அதிர்ச்சி தகவல்.. உச்சம் தொடும் தங்க விலை!

தங்கம் வாங்கவுள்ளோருக்கு அதிர்ச்சி தகவல்.. உச்சம் தொடும் தங்க விலை!

தவிசாளருக்கான முன்மொழிவு

அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பில் 04 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பில் 08 உறுப்பினர்களும், தேசிய மக்கள் கட்சி சார்பில் 03 உறுப்பினர்களும்,தேசிய காங்கிரஸ் 02உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 01 உறுப்பினர் என 18 பேர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி வசமான அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் பதவி! | Nintavur Sabha New Chair Elected

மேலும், இதன்போது உள்ளுராட்சி ஆணையாளர் புதிய தவிசாளருக்கான முன்மொழிவுகளை கோரினார்.

இந்நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவரும் தேசிய மக்கள் சக்தி கட்சியை செர்ந்த ஒருவரும் புதிய தவிசாளர் தெரிவிற்காக சபையில் உறுப்பினர்களினால் பிரேரிக்கப்பட்டனர்.

இதனை அடுத்து பகிரங்க வாக்கெடுப்பா அல்லது இரகசிய வாக்கெடுப்பா என சபையில் விடப்பட்டது. இதன் போது சிறு இழுபறிக்கு பின்னர் பெரும்பாலான உறுப்பினர்கள் பகிரங்க வாக்கெடுப்பினை கோரினர்.

பெண் குழந்தையின் சிறப்புகள்

பெண் குழந்தையின் சிறப்புகள்

பகிரங்க வாக்கெடுப்பு 

அத்துடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை சேரந்த 4 பேர் குறித்த வாக்கெடுப்பினை பகிஸ்கரித்தனர்.

இதே வேளை ஏற்கனவே உறுப்பினர்களால் பிரேரிக்கப்பட்டு வழிமொழியப்பட்ட இரண்டு புதிய தவிசாளர் தெரிவு உறுப்பினர்களும் பகிரங்க வாக்குமூலத்தின் அடிப்படையில் ஏனைய உறுப்பினர்களால் புதிய தவிசாளராக தெரிவு செய்ய கோரப்பட்டது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி வசமான அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் பதவி! | Nintavur Sabha New Chair Elected

இதன்போது அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய தவிசாளராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட அப்துல் சமட் முகம்மது உவைஸ் என்பவர் 11 ஆசனங்களை பெற்று அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய தவிசாளராக தெரிவானார்.

இந்நிலையில், எதிராக போட்டியிட்ட தேசிய மக்கள் கட்சி மற்றுமொரு தவிசாளர் வேட்பாளரான சாஹீர் பாஹீமா என்பவர் 03 ஆசனங்களை பெற்ற நிலையில், 08 மேலதிக வாக்குகளால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர் அப்துல் சமட் முகம்மது உவைஸ் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக உள்ளுராட்சி ஆணையாளர் உத்தியோக பூர்வமாக அறிவித்தார்.

முஸ்லிம் ஊடகவியலாளர் மீது சரமாரி தாக்குதல் : அரசியல் தலைவர்கள் விடுத்த உயிர் அச்சுறுத்தல்

முஸ்லிம் ஊடகவியலாளர் மீது சரமாரி தாக்குதல் : அரசியல் தலைவர்கள் விடுத்த உயிர் அச்சுறுத்தல்

தவிசாளர் தெரிவு 

அத்துடன் நடைபெற்ற தவிசாளர் பகிரங்க வாக்கெடுப்பின் போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் 04 பேர் வாக்களிப்பில் இருந்து நீங்கி நடுநிலை வகித்ததுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்மொழியப்பட்ட உறுப்பினர் அப்துல் சமட் முகம்மது உவைஸ் என்பருக்கு 11 வாக்குகளும் ஏனைய தரப்பினரால் புதிய தவிசாளர் வேட்பாளராக முன்மொழியப்பட்ட தேசிய மக்கள் சக்தி கட்சி சாஹீர் பாஹீமா என்பருக்கு 03 வாக்குகளும் கிடைத்தது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி வசமான அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் பதவி! | Nintavur Sabha New Chair Elected

மேலும் கூட்டத்தின் தொடர்ச்சியாக உப தவிசாளர் தெரிவு நடைபெற்றது. உப தவிசாளராக தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் முகம்மட் பாரூக் றஜீத் தெரிவு செய்யப்பட்டார்.

ஏனைய தரப்பில் இருந்து போட்டிக்கு யாரும் முன்வராதமையால் சபையில் ஏகமனதாக உப தவிசாளராக முகம்மட் பாரூக் றஜீத் தெரிவானார்.

மேலும், இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களான உதுமாலெப்பை ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். 

மட்டக்களப்பில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

மட்டக்களப்பில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

எரிபொருள் கையிருப்பு தொடர்பில் அரசாங்க தரப்பு வெளியிட்ட தகவல்

எரிபொருள் கையிருப்பு தொடர்பில் அரசாங்க தரப்பு வெளியிட்ட தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGalleryGallery