கிழக்கு மாகாண அரச சேவை ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்

Easwari Rao Trincomalee Government Employee Government Of Sri Lanka
By Laksi Oct 19, 2024 03:52 AM GMT
Laksi

Laksi

கிழக்கு மாகாண அரச சேவை ஆணைக்குழுவிற்கான புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நியமனங்களை, திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர நேற்று (18) வழங்கி வைத்துள்ளார்.

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவித்தல்

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவித்தல்

புதிய உறுப்பினர்கள்

இதன்போது, புதிய ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவித்த ஆளுநர் சுதந்திரமாக செயற்படுவதற்கு சகல அதிகாரங்களும் வழங்கப்பட்டு அரசியல் தலையீடுகள் இன்றி தமது சேவைகளை ஆற்றக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண அரச சேவை ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம் | New Eastern Province Public Service Commission

இந்த நிலையில், ஆணைக்குழுவின் புதிய தலைவராக ஓய்வுபெற்ற முன்னாள் திருகோணமலை மாவட்ட செயலாளரான பி.எச்.என். ஜெயவிக்ரமவும் உறுப்பினர்களாக, ஓய்வுபெற்ற முன்னாள் திருகோணமலை மேலதிக மாவட்டச் செயலாளரான கே. அருந்தவராஜா, ஓய்வுபெற்ற முன்னாள் அம்பாறை பிரதேச செயலாளரான ஜி.எல்.ஆரியதாச, ஓய்வுபெற்ற பாடசாலை ஆசிரியரான மாயா எஸ். ஹமீத் ரிபாஹிதீன் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் உதவி வெடிபொருட்கள் கட்டுப்பாட்டாளரான எஸ். முகமது இக்ரிமா ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வாகன வருமான அனுமதிப்பத்திரம் குறித்து போக்குவரத்து அமைச்சின் முக்கிய தீர்மானம்

வாகன வருமான அனுமதிப்பத்திரம் குறித்து போக்குவரத்து அமைச்சின் முக்கிய தீர்மானம்

மட்டக்களப்பில் மார்பக புற்றுநோய் தொடர்பில் விழிப்புணர்வுப் பேரணி

மட்டக்களப்பில் மார்பக புற்றுநோய் தொடர்பில் விழிப்புணர்வுப் பேரணி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGallery