குச்சவெளியில் துப்பாக்கி சூடு : ரிஷாட் கண்டனம்

Risad Badhiutheen Sri Lanka Politician Sri Lankan Peoples Eastern Province Gun Shooting
By Rakshana MA Jun 04, 2025 06:30 AM GMT
Rakshana MA

Rakshana MA

திருகோணமலை - குச்சவெளியிலிருந்து கடலுக்குச் சென்ற இஜாஸ் என்ற நபர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தினைக் கண்டிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

அதேவேளை, துப்பாக்கிச்சூடு நடாத்திய நபர்கள் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் பொலிஸ் மாஅதிபரிடம்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்று (03) கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானவர் அதிதீவிர சிகிச்சசை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

மின்சார கட்டணம் அதிகரிக்குமா..சபையில் கேள்வி எழுப்பிய சஜித்

மின்சார கட்டணம் அதிகரிக்குமா..சபையில் கேள்வி எழுப்பிய சஜித்

முறையான விசாரணை

இந்த சம்பவம் குறித்து கருத்துத்தெரிவித்த றிஷாட் பதியுதீன், “கடற்றொழிலுக்காக கடலுக்குச்சென்ற அப்பாவி சமூகத்தினர் மீது கடற்படை பாதுகாப்புத்தரப்பினர் அத்துமீறி நடப்பதை நாம் வண்மையாகக் கண்டிக்கின்றோம்.  

சந்தேக நபர்களாக சந்தேகிக்கப்பட்டால் உரிய முறைப்படி விசாரித்து நடவடிக்களை மேற்கொள்ளாமல் இவ்வாறு தான்தோன்றித்தனமான முறையில் அப்பாவிகள் மீது துப்பாகிச்சூடு மேற்கொள்ளும் இச்செயற்பாட்டை நிறுத்த வேண்டும்.

குச்சவெளியில் துப்பாக்கி சூடு : ரிஷாட் கண்டனம் | Navy Fires Fisherman Srilanka 2025

இவ்வாறான செயற்பாட்டால் நாட்டின் பாதுகாப்புத்துறை மேல் மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றமைக்கு பெரும் உதாரணமாகி அமைந்து விடும். மீனவ சமூகத்தை அச்சமூட்டும் இச்செயற்பாடுகளை நிறுத்த வேண்டும்.

குறித்த சம்பவம் தொடர்பில் பாதுகாப்புத்தரப்பு உடனடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டுமெனவும் இந்த சம்பவத்தால் கடற்றொழிலாளர் சமூகத்துக்கு மட்டுமல்ல, நாட்டின் சட்ட ஒழுங்குக்கும் சவாலாக அமைந்துள்ளது” எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இழுபறியிலுள்ள செங்கலடி பிரதேச சபையின் தவிசாளர் பதவி

இழுபறியிலுள்ள செங்கலடி பிரதேச சபையின் தவிசாளர் பதவி

மாணவர்களுக்கான தனித்துவமான அடையாள அட்டை குறித்து வெளியான அறிவிப்பு

மாணவர்களுக்கான தனித்துவமான அடையாள அட்டை குறித்து வெளியான அறிவிப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW