நாட்டில் சிக்கிய பல பில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள்

Sri Lanka Sri Lankan Peoples Drugs
By Rakshana MA Jun 29, 2025 03:52 AM GMT
Rakshana MA

Rakshana MA

கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மாத்திரம், இலங்கைக்குள் கடல் வழிகளில் சுமார் 1758 கிலோ கிராம் ஹெரோய்ன் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களை எடுத்து வர முயற்சிக்கப்பட்டதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும், போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இந்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

ஓட்டமாவடியில் நெகிழ்ச்சியூட்டும் நிக்காஹ் நிகழ்வு !

ஓட்டமாவடியில் நெகிழ்ச்சியூட்டும் நிக்காஹ் நிகழ்வு !

போதைப்பொருள் மீட்பு

இந்தநிலையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் சந்தை பெறுமதி 23பில்லியன் ரூபாய்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதில் 11 பில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரொய்ன் போதைப்பொருட்களும், 12 பில்லியன் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருட்களும் அடங்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் சிக்கிய பல பில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் | Narcotics Bureau Sri Lanka News

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் மேற்கொண்ட நான்கு தனித்தனி சோதனைகளில் இந்த பெரிய அளவிலான போதைப்பொருட்கள் மீட்கப்பட்டதுடன் இந்த கடத்தல்கள் தொடர்பில் 25 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

இஸ்ரேலுக்கு ஏவுகணை தாக்குதல்..! யேமனிலிருந்து ஏவப்பட்டதாக இராணுவம் அறிவிப்பு

இஸ்ரேலுக்கு ஏவுகணை தாக்குதல்..! யேமனிலிருந்து ஏவப்பட்டதாக இராணுவம் அறிவிப்பு

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி குறித்து வெளியான அறிவிப்பு

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி குறித்து வெளியான அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW