மூதூர் குச்சவெளி சபை ஆட்சி அமைப்பது தொடர்பில் உடன்படிக்கை

Ilankai Tamil Arasu Kachchi Sri Lanka Politician Eastern Province Political Development
By Rakshana MA May 27, 2025 10:07 AM GMT
Rakshana MA

Rakshana MA

குச்சவெளி மற்றும் மூதூர் பிரதேச சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இன்றைய தினம் (27) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இலங்கை தமிழரசு கட்சி ஆகியவற்றுக்கு இடையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அதன் தேசிய அமைப்பாளர் எம்.எஸ்.தௌபீக் மற்றும் இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் திருகோணமலை மாவட்ட தலைவர் கதிரவேலு சண்முகம் குகதாசன் இருவரும் கையொப்பமிட்டுள்ளனர்.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவில் மாற்றம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவில் மாற்றம்

புரிந்துணர்வு ஒப்பந்தம்

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட பின்னர் ஊடகங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ச.குகதாசன் கருத்து தெரிவிக்கையில், 

திருகோணமலை மாநகர சபை, பட்டினமும் சூழலும் பிரதேச சபை மற்றும் தம்பலகாமம் பிரதேச சபை ஆகியவற்றில் ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்து ஆட்சி அமைப்போம் என்றும் கட்சி அடிப்படையில் முஸ்லிம் காங்கிரஸ் உடன்பாடு கண்டுள்ளது.

மூதூர் குச்சவெளி சபை ஆட்சி அமைப்பது தொடர்பில் உடன்படிக்கை | Muthur Kuchchaveli Sabha Government

அதன்படி திருகோணமலையில், முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை எங்கு இருக்குமோ அங்கு ஆட்சியமைப்பர் அதே போன்று இலங்கை தமிழரசு கட்சி பெரும்பான்மை உள்ள இடத்தில் தமிழரசு கட்சி ஆட்சியமைக்கும்.

இந்நிலையில் இந்த உடன்படிக்கையானது, நிதி ஒதுக்கீடு நிருவாகம் அதிகார பரவலாக்கம் உள்ளிட்ட மேலும் பல நிபந்தனைகளோடு கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இம்முறை இலவசமாக ஹஜ் செய்யவுள்ள 20 கிழக்கிலங்கை மக்கள்..!

இம்முறை இலவசமாக ஹஜ் செய்யவுள்ள 20 கிழக்கிலங்கை மக்கள்..!

உடன்படிக்கை

இதன்படி, குறித்த ஆட்சியமைப்பின் போது, உடன்பாடுகள் குச்சவெளி பிரதேச சபையில் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சபை உறுப்பினர் ஒருவர் தவிசாளராகவும் இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர் ஒரு பிரதி தவிசாளராகவும் செயற்படுவர்.

மூதூர் குச்சவெளி சபை ஆட்சி அமைப்பது தொடர்பில் உடன்படிக்கை | Muthur Kuchchaveli Sabha Government

அதேபோன்று, குச்சவெளி பிரதேச சபையில் அடுத்து வரும் இரு ஆண்டுகள் தமிழரசு கட்சி உறுப்பினர் ஒருவர் தவிசாளராகவும், முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் பிரதி தவிசாளராகவும் செயற்படுவர்.

மேலும், மூதூர் பிரதேச சபையில் இரு ஆண்டுகளுக்கு முதல் தடவையில் தமிழரசு கட்சி உறுப்பினர் தவிசாளராகவும், முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் பிரதி தவிசாளராகவும் செயற்படுவதுடன், அடுத்து வரும் இரு ஆண்டுகள் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் தவிசாளராகவும் தமிழ் அரசு கட்சி உறுப்பினர் பிரதி தவிசாளராகவும் செயற்படுவர் என தெரிவித்துள்ளார்.

மேலும், இதில் குச்சவெளி மூதூர் சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலாப்பயணிகள்..!

இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலாப்பயணிகள்..!

மட்டக்களப்பில் காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பில் காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW   


GalleryGalleryGalleryGallery