பொத்துவில் பிரதேச சபையை கைப்பற்ற வியூகம் அமைக்கும் முஷர்ரப்
பொத்துவில் பிரதேச சபையின் அதிகாரத்தைக் கைப்பற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷர்ரப் புதிய வியூகத்தை அமைத்துள்ளார்.
அந்த வகையில், பிரதேச சபை தேர்தலில் வெற்றிபெற்ற முஷர்ரபின் குழுவினர், எதிர்வரும் நாட்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் உத்தியோகபூர்வமாக இணைவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர்.
முக்கிய மாற்றங்கள்
இந்த இணைப்பு உறுதிப்படுத்தப்பட்ட பிறகு, இரு தரப்பும் ஒன்றிணைந்து பொத்துவில் பிரதேச சபையின் அதிகாரத்தை கைப்பற்றும் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும், பெரும்பாலும் நாளை (27), முஷர்ரப் பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளராக பொறுப்பேற்கலாம் என ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நடவடிக்கைகள், அப்பிரதேச அரசியல் கட்டமைப்பில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவையாக கருதப்படுகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |