மின்தூக்கியில் சிக்கிய நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள்

Parliament of Sri Lanka Sri Lanka Parliament Sri Lanka Politician Weight Lifting
By Rakshana MA Jun 30, 2025 06:00 AM GMT
Rakshana MA

Rakshana MA

கொழும்பு பண்டாரநாயக்க நினைவு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்று வந்த செயலமர்வொன்றில் பங்கேற்று வெளியேறியபோது, நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மின்தூக்கியில் (Lift) சிக்கிக்கொண்டனர்.

இந்த சம்பவடானது கடந்த 28ஆம் திகதி பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம், புதிய அரசியல் கலந்தாய்வு மற்றும் பயிற்சி நடவடிக்கையில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான சமிந்த்ராணி கிரியெல்ல சித்ரால் பெர்னாண்டோ (ஐக்கிய மக்கள் சக்தி – புத்தளம் மாவட்டம்) சதுர கலப்பத்தி நிலந்தி கொட்டஹாச்சி (தேசிய மக்கள் சக்தி) ஆகியோருக்கிடையே நேர்ந்தது.

கொழும்பில் முன்னெடுக்கப்படும் ஷிஆ முஸ்லிம்களின் மத நிகழ்வுகள்..!

கொழும்பில் முன்னெடுக்கப்படும் ஷிஆ முஸ்லிம்களின் மத நிகழ்வுகள்..!

சிக்கிய உறுப்பினர்கள்

இவர்கள் மண்டபத்தில் இருந்து மின்தூக்கி வழியாக வெளியேறும் போது, மின்தூக்கியில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மின்தூக்கியில் சிக்கிய நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் | Mps Stuck In Bmich Lift Colombo

அதன் காரணமாக அவர்கள் அதற்குள் சிக்கிக்கொண்டனர். சம்பவத்துக்குப் பிறகு, ஊழியர்கள் குழு விரைந்து நடந்து கொண்டு, லிஃப்டில் சிக்கிய நால்வரையும் பாதுகாப்பாக வெளியேற்றியது.

சித்ரால் பெர்னாண்டோ இந்த சம்பவம் குறித்து தெரிவிக்கையில், “நாங்கள் லிஃப்டில் சிக்கிக்கொண்ட போது, உள்ளே சற்று பதட்டமான நிலை ஏற்பட்டது. பின்னர் ஊழியர்கள் எங்களைக் காப்பாற்றினர்” எனத் தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்கள் அனுமதி குறித்து வெளியாகும் புதிய சுற்றறிக்கை

பாடசாலை மாணவர்கள் அனுமதி குறித்து வெளியாகும் புதிய சுற்றறிக்கை

பாதுகாப்பு சிக்கல்

சமிந்த்ராணி கிரியெல்ல கூறியதாவது: “இது ஒரு மிகவும் எதிர்பாராத மற்றும் சங்கடமான அனுபவம். கடந்த 14 வாரங்களாக இத்தகவல் மற்றும் உரையாடல் பயிற்சிப்பட்டறையில் பங்கேற்று வருகிறோம்.

மின்தூக்கியில் சிக்கிய நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் | Mps Stuck In Bmich Lift Colombo

இன்றும் அந்த வகையில் ஒரு பயிற்சி நடைபெறவுள்ளது,” என தெரிவித்தார். இந்த பயிற்சிப் பட்டறைகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கல்வியாளர்களும் பங்கேற்று வருகின்றனர்.

சம்பவம் சிறியதாக இருந்தாலும், மாநாட்டு மண்டபத்தில் பாதுகாப்பு மற்றும் வசதிகள் தொடர்பான சிக்கல்கள் மீண்டும் எழுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரானின் எவின் சிறையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்! 71 பேர் உயிரிழப்பு உறுதி

ஈரானின் எவின் சிறையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்! 71 பேர் உயிரிழப்பு உறுதி

இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டம்

இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW