மட்டக்களப்பில் மீண்டுமொரு கோர விபத்து
Sri Lankan Peoples
Eastern Province
Accident
By Rakshana MA
மட்டக்களப்பு - வந்தாறுமூலை பிரதான வீதியில் நேற்று (23) இரவு 9 மணியளவில் தொடர்ச்சியாக இன்னுமொரு விபத்து சம்பம் பதிவாகியுள்ளது.
வந்தாறுமூலையில் ஊடாக பயணித்த லொறி ஒன்றும் மோட்டார் சைக்கிளும் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து சம்பவம்
விபத்தின் போது, மோட்டார் சைக்கிள் லொறியின் முன்பகுதியில் சிக்குண்ட நிலையில், மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் கீழே வீழ்ந்து மோட்டார் சைக்கிளின் கீழ் சிக்கியுள்ளார்.
இதனால் அவர் படுகாயமடைந்த நிலையில் உடனடியாக மீட்கப்பட்டு செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவவட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக வந்தாறுமூலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
