அதிகரிக்கும் மரக்கறியின் விலை..! பாதிக்கப்படும் பொது மக்கள்
பச்சை மிளகாய் ஒரு கிலோகிராமின் சில்லறை விலை ரூ.1000 வரை உயர்வடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் புள்ளிவிவரங்களின்படி, பச்சை மிளகாயின் மொத்த விலை தற்போது ரூ.500 முதல் ரூ.600 வரை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விலை மாற்றம்
இதன் விளைவாக, பல்வேறு சந்தைகளில் பச்சை மிளகாய் சில்லறை விலையில் ரூ.1000 வரை விற்கப்படுவதாக தெரியவந்துள்ளது.
பச்சை மிளகாயின் அறுவடை அளவு குறைவடைந்துள்ளதோடு, சந்தை வரத்தும் முக்கியமாக குறைந்திருப்பதால், இவ்வாறு விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, தக்காளி விலையிலும் குறிப்பிடத்தக்க உயர்வே காணப்படுகிறது. தக்காளியின் மொத்த விலை ஒரு கிலோக்கு ரூ.200 ஆகவும், சில்லறை விலை ரூ.500 ஆகவும் அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், இவ்வாறான விலை உயர்வுகளால் சமையலுக்குத் தேவையான அடிப்படைப் பொருட்கள் பொதுமக்களுக்கு பெரும் சுமையாக மாறி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |