540 கையடக்கத் தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்ட சிறைச்சாலை!
இந்த வருடம் காலி சிறைச்சாலையில் இருந்து 540 கையடக்கத் தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த செய்தி புதிய அரசாங்கத்தின் முதலாவது காலி மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடவடிக்கை
இது காலி மாவட்ட செயலகத்தில் தொழிற்கல்வி பிரதியமைச்சர் நளின் ஹேவகே தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த தகவல் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கையடக்கத் தொலைபேசிகள் கடத்தலுக்கு சிறைச்சாலை அமைந்திருந்த இடம் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளதாக காலி சிறைச்சாலையின் பிரதி பிரதான சிறைச்சாலை அதிகாரி தனுஷ்க புஸ்பகுமார சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் கூட்டத்தில் பேசிய காலி மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் சேரம், சிறைச்சாலை மதில் சுவருக்கு மேல் பாதுகாப்பு வலை மற்றும் சிசிடிவி கமராக்களை பொருத்துவதற்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |