உள்ளூராட்சித் தேர்தல் குறித்த புகார்களைச் சமர்ப்பிக்க புதிய மொபைல் செயலி
Sri Lankan Peoples
Crime
Election
Local government Election
Mobile Phones
By Rakshana MA
உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான புகார்களைச் சமர்ப்பிப்பதற்கான புதிய மொபைல் செயலி இன்று (22) தேர்தல் ஆணையகத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் புகார்களை முறையான மற்றும் புதிய தொழில்நுட்ப முறைகள் மூலம் சமர்ப்பிப்பதை எளிதாக்கும் வகையில் EC EDR என்ற மொபைல் பயன்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புகார்கள்
தேர்தல் ஆணையத் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க கூறுகையில், "பொதுமக்கள் புகார் அளித்தால், இப்போது இந்த செயலி மூலம் அதைச் சமர்ப்பிக்கலாம்.
புகாரை அளித்த நபரும் தங்கள் புகாருக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறியலாம். இந்த செயலி மூலம் வீடியோ மற்றும் புகைப்படத் தகவல்களை வழங்கும் வசதியும் உள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |