மருதமுனை கடற்கரையை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம்

Ampara Eastern Province Canada Kalmunai
By Laksi Aug 29, 2024 07:15 AM GMT
Laksi

Laksi

அம்பாறை மாவட்டத்தின் பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவ வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட மருதமுனை கடற்கரையை துப்பரவு செய்யும் நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வானது அம்பாறை அரசாங்க அதிபர் சிந்தக அபேவக்கிரம தலைமையில் அண்மையில் நடைபெற்றுள்ளது.

இதன் போது மருதமுனை கடற்கரையிலிருந்து பாண்டிருப்பு கடற்கரை வரை குறித்த கழிவு முகாமைத்துவ வேலைத்திட்டத்தின் கீழ் துப்பரவு செய்யப்பட்டன.

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்ய திட்டம்: அனுர தெரிவிப்பு

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்ய திட்டம்: அனுர தெரிவிப்பு

நிதியுதவி

பிரண்ட்ஷிப் பவுண்டேஷனால் வழிநடத்தப்பட்ட இந்தத் திட்டத்திற்கு சுதேச முயற்சிகளுக்கான கனடா நிதியம் மற்றும் கனேடிய உயர் ஸ்தானிகராலயம் நிதியுதவி அளித்தன.

மருதமுனை கடற்கரையை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் | Maruthamunai Beach Cleaning Project

இந்த நிகழ்வில் சிங்கள, முஸ்லிம், தமிழ் இளைஞர் சமூகம் கலந்து கொண்டதுடன், இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ் , கல்முனை மாநகர சபை பிரதி ஆணையாளர் ஏ.எச்.அசீம் உட்பட பெருமளவிலான மக்கள்  கலந்துகொண்டனர்.

உள்ளூராட்சி மன்றத்தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத்தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGallery