தங்க தாமரை என்று கூறி ஒரு பூவை விற்பனை செய்ய நபர் ஒருவர் கைது

Matale Sri Lanka Police Investigation Crime
By Laksi Aug 02, 2024 05:23 AM GMT
Laksi

Laksi

மாத்தளை - அலுவிஹார பிரதேசத்தில் தொல்பொருள் மதிப்பு மிக்க தங்க தாமரை என்று கூறி ஒரு பூவை விற்பனை செய்ய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த நபர் நேற்று (01.08.2024) கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் 33 வயதான மாத்தளை - கவுடுபெல்லல்ல பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

முன்கூட்டிய தயார் நிலைக்காக ரணில் எடுத்துள்ள நடவடிக்கை! சரியான தீர்மானம் என்கிறார் அலி சப்ரி

முன்கூட்டிய தயார் நிலைக்காக ரணில் எடுத்துள்ள நடவடிக்கை! சரியான தீர்மானம் என்கிறார் அலி சப்ரி

கைது நடவடிக்கை

பல்வேறு அளவுகளில் 24 இதழ்களை கொண்ட தொல்லியல் மதிப்புடையதாகக் கூறப்படும் இந்த தங்கத் தாமரை மலரின் எடை 706 கிராம் என தெரிவிக்கப்படுகின்றது.

தங்க தாமரை என்று கூறி ஒரு பூவை விற்பனை செய்ய நபர் ஒருவர் கைது | Man Arrested With Golden Lotus Flower In Matale

அத்தோடு, குறித்த மலரை 5,000,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய சந்தேகநபர் முயற்சித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சுரக்ஷா காப்பீட்டு வேலைத்திட்டம் தொடர்பில் கல்வி அமைச்சரின் தகவல்

சுரக்ஷா காப்பீட்டு வேலைத்திட்டம் தொடர்பில் கல்வி அமைச்சரின் தகவல்

மொட்டுக்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எதிர்வரும் புதன்கிழமை வெளியாகவுள்ள அறிவிப்பு

மொட்டுக்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எதிர்வரும் புதன்கிழமை வெளியாகவுள்ள அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW