வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒருவர் கைது

Anuradhapura Sri Lanka Police Investigation Crime
By Laksi Oct 01, 2024 03:09 PM GMT
Laksi

Laksi

அநுராதபுரம், கெக்கிராவ, பலலுவெவ பிரதேசத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தம்புள்ளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் கெக்கிராவ, பலாகல பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுவர்களின் மனநிலையை வளப்படுத்துவதில் அதீத அக்கறை கொள்ள வேண்டும்: ரிஷாட்

சிறுவர்களின் மனநிலையை வளப்படுத்துவதில் அதீத அக்கறை கொள்ள வேண்டும்: ரிஷாட்

மேலதிக விசாரணை

இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 2,200 வெளிநாட்டு சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒருவர் கைது | Man Arrested With Foreign Cigarettes

இதனையடுத்து, சந்தேகநபர் விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிரியாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

ஒலுவில் அல்-ஹம்றா மஹா வித்தியாலயத்தின் சிறுவர் தின நிகழ்வு

ஒலுவில் அல்-ஹம்றா மஹா வித்தியாலயத்தின் சிறுவர் தின நிகழ்வு

கொழும்பு பங்குச் சந்தையில் இன்று வளர்ச்சி

கொழும்பு பங்குச் சந்தையில் இன்று வளர்ச்சி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW