புத்தளத்தில் தவறான முடிவெடுத்து இளம் காதல் ஜோடி உயிரிழப்பு

Puttalam Sri Lanka Police Investigation Eastern Province
By Laksi Sep 03, 2024 07:22 AM GMT
Laksi

Laksi

புத்தளத்தில் இளம் காதல் ஜோடி அடுத்தடுத்த நாட்களில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது உடப்புவ மற்றும் மதுரங்குளிய ஆகிய பகுதிகளில் கடந்த 30 மற்றும் 31ஆம் திகதிகளில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, உடப்பு சின்னப்பாடுவ பகுதியை சேர்ந்த கவீஷ லிவேரா என்ற 19 வயதுடைய இளைஞனும், மதுரங்குளிய பெட்ரிக் மாவத்தையை சேர்ந்த நிம்சானி பிரமோதிகா என்ற 19 வயதுடைய யுவதியும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

தலதாவின் இடத்திற்கு கருணாரத்ன பரணவிதான நியமனம்

தலதாவின் இடத்திற்கு கருணாரத்ன பரணவிதான நியமனம்

உயிரிழப்பு

குறித்த இருவரும் பாடசாலை காலத்தில் இருந்தே காதல் தொடர்பில் இருந்ததாகவும், பெற்றோருக்கு தெரியாமல் அடிக்கடி சந்தித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புத்தளத்தில் தவறான முடிவெடுத்து இளம் காதல் ஜோடி உயிரிழப்பு | Lovers Wrong Decision In Puttalam

கடந்த 30ஆம் திகதி பிற்பகல் இளைஞன் உயிரிழந்த நிலையில், அடுத்த நாள் 31ஆம் திகதி மாலை காதலி தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.

38 நாடுகளுக்கு வீசா இல்லாத நுழைவு அனுமதி! வெளியாகியுள்ள தகவல்

38 நாடுகளுக்கு வீசா இல்லாத நுழைவு அனுமதி! வெளியாகியுள்ள தகவல்

பொலிஸார் விசாரணை

தூக்கில் தொங்கிய மகளை மீட்ட தந்தை, முந்தலம வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புத்தளத்தில் தவறான முடிவெடுத்து இளம் காதல் ஜோடி உயிரிழப்பு | Lovers Wrong Decision In Puttalam

குறித்த இருவரின் மரணம் தொடர்பில் மர்மம் நிலவுவதாக தெரிவித்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்றைய தினத்திற்கான அமர்வு தொடர்பில் வெளியான தகவல்

இன்றைய தினத்திற்கான அமர்வு தொடர்பில் வெளியான தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW