பொத்துவிலில் இடம்பெற்றுள்ள தேர்தலுக்கான வியூகம் அமைக்கும் கலந்துரையாடல்
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொத்துவில் பிரதேச முக்கியஸ்த்தர்களுடன் நேற்று(09) இக்கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
கலந்துரையாடல்
இதன் போது எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தல் வியூகங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன், கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலும் வேட்பாளர்கள் தெரிவு சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளன.
இதன்போது கட்சியின் உயர் பீட உறுப்பினர்கள், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், பொத்துவில் பிரதேச அமைப்பாளர், பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், வட்டார அமைப்பாளர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





