அம்பாறையில் ஆரம்பமாகியுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான விசேட கலந்துரையாடல்
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் அம்பாரை மாவட்ட தேர்தல் ஏற்பாட்டுக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நிஸாம் காரியப்பர் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது, நேற்று(09) ஒலுவில் தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றுள்ளது.
கலந்துரையாடல்
மேலும், இதன்போது போது ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளரும் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, கட்சியின் பிரதித் தலைவர்களான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் , சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர், கட்சியின் பொருளாளரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயருமான ரஹ்மத் மன்சூர் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும், கட்சியின் பிரதிச் செயலாளர் மன்சூர் ஏ.காதர், கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.சீ.சமால்தீன், உயர் பீட உறுப்பினர் சப்றாஸ் , அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், பிரதேச உச்ச பீட உறுப்பினர்கள், மத்திய குழுக்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




