குச்சவெளி துப்பாக்கி சூட்டுக்கு வலுக்கும் கண்டனங்கள்
இலங்கை கடற்படையானது கடற்றொழிலாளர் ஒருவர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதை சட்ட ஆட்சி உள்ள ஜனநாயக நாட்டில் அனுமதிக்க முடியாது என கிண்ணியா பிரதேச சபை உறுப்பினர் எம்.ஏ.அப்துல் ஹாதீ தெரிவித்துள்ளார்.
குச்சவெளி பிரதேசத்தைச் சேர்ந்த, இஜாஸ் என்ற கடற்றொழிலாளர் மீது கடற்படையினர் நடாத்திய துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கைகளில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, இலங்கை கடற்படையானது குறித்த கடற்றொழிலாளர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதை சட்ட ஆட்சி உள்ள ஜனநாயக நாட்டில் அனுமதிக்க முடியாது.
வலுக்கும் கண்டனங்கள்
ஏழைத் தொழிலாளி குச்சவெளி இஜாஸ் தனது ஜீவனோபாய தொழிலுக்காகவும், புனித ஹஜ் பெருநாள் குடும்ப சகிதம் கொண்டாட வேண்டும் என்பதற்காக தனது சட்டபூர்வமான தொழில் பயணத்தை கடலில் மேற்கொள்ளும் போது இவ்வாறான காட்டுச் சட்டம் பயன்படுத்தப்படுவதை மிகவும் வன்மமையாக கண்டிக்கிறேன்.
சட்டவிரோதமாக வருவதாக சொல்லப்படும் இந்திய கடற்றொழிலாளர்களைக் கூட கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்திய வரலாறு தான் பதிவாகியுள்ளது.
ஆனால் குச்சவெளி இஜாஸ் விடயத்தில் முற்றிலும் மாற்றமாக என்ன தான் நடாத்தப்பட்டது, இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் கவலையளிக்கிறது.
இவ்வாறான சம்பவங்கள் இன ரீதியான முரண்பாடுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளதால், குறித்த சம்பவத்தில் அரசு முறையான விசாரணை நடாத்தி பாதிக்கப்பட்ட நபருக்கு நீதியை நிலைநாட்டி உரிய நட்டஈட்டை வழங்குவதுடன் துப்பாக்கி சூடு நடாத்தியவருக்கும் அனுமதி வழங்கியவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொலிஸ்மா அதிபரைக் கேட்டுக் கொள்கிறேன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |