கல்முனையில் கடற்கரையோர சுத்தப்படுத்துகை தினம் முன்னெடுப்பு

World Environment Day Kalmunai
By Rakshana MA Jun 05, 2025 11:00 AM GMT
Rakshana MA

Rakshana MA

பிளாஸ்திக் மாசாக்கத்தை முடிவுக்கு கொண்டு வருதல் (Ending plastic pollution) எனும் தொனிப்பொருளை மையமாக கொண்டு கல்முனையில்  கடற்கரையோர சுத்தப்படுத்தும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

'கடற்கரையோர சுத்தப்படுத்துகை தினம் ' எனும் தொனிப்பொருளில் கல்முனை கடற்கரை பிரிவுகளில் கடற்கரையோர சுத்தப்படுத்துகை நிகழ்வு இன்று (05) காலை 7 மணி முதல் இடம்பெற்றது.  

சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மே 30 - ஜூன் 5 வரை கல்முனை பதில் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ரி.எம்.எம். அன்சார் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலில் பல நிகழ்ச்சித் திட்டங்கள் பிரதேச செயலக பிரிவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  

திருகோணமலையில் கடற்றொழிலாளர்கள் வீதி மறித்து போராட்டம்

திருகோணமலையில் கடற்றொழிலாளர்கள் வீதி மறித்து போராட்டம்

சுத்தப்படுத்துகை தினம் 

இந்த நிகழ்வின் போது, பிரதேச செயலக வெளிக்கள உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் - திட்டமிடல், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி பயனாளிகளின் பங்குபற்றுதலுடன் கடற்கரையோர பிரதேசங்கள் சுத்தம் செய்யப்பட்டன.

கல்முனையில் கடற்கரையோர சுத்தப்படுத்துகை தினம் முன்னெடுப்பு | Kalmunai Environment Day 2025

கல்முனை அல் - பஹ்ரியா மகா வித்தியாலயத்தில் சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மர நடுகை இடம்பெற்றது.

மேலும், இந்த நிகழ்வில் பாடசாலை அதிபர் எம்.ஏ.சலாம் மற்றும் பிரதி அதிபர் உதவி அதிபர்கள் ஆகியோரின் பங்கேற்புடன் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

குச்சவெளி துப்பாக்கி சூட்டுக்கு வலுக்கும் கண்டனங்கள்

குச்சவெளி துப்பாக்கி சூட்டுக்கு வலுக்கும் கண்டனங்கள்

சாய்ந்தமருதுவில் 150 வேப்பமரம் நடும் செயற்றிட்டம் முன்னெடுப்பு

சாய்ந்தமருதுவில் 150 வேப்பமரம் நடும் செயற்றிட்டம் முன்னெடுப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW    
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery