அகில இலங்கை தேசிய மட்ட போட்டியில் கல்முனை சாஹிரா கல்லூரி வரலாற்றுச் சாதனை

Ampara Eastern Province Kalmunai
By Laksi Sep 10, 2024 07:22 AM GMT
Laksi

Laksi

அகில இலங்கை தேசிய மட்ட இஸ்லாமிய கலாசாரப் போட்டியில் கல்முனை சாஹிரா கல்லூரியினர் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.

இந்த போட்டியானது கல்வி அமைச்சினால் முதன் முதலாக ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த சனி மற்றும் ஞாயிறு தினங்களில் (07,08) கொழும்பு சாஹிரா கல்லூரியில் நடைபெற்றது.

இதன்போது, வலய மட்டம், மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்ற கல்முனை சாஹிரா கல்லூரி கலிகம்பு கலை அணியினர் அகில இலங்கை தேசிய மட்ட போட்டியிலும் கலந்து கொண்டு மூன்றாம் இடத்தைப் பெற்று சாதனையை புரிந்துள்ளனர்.

சாய்ந்தமருதில் ஐக்கிய மக்கள் சக்தியின் காரியாலயம் திறந்து வைப்பு

சாய்ந்தமருதில் ஐக்கிய மக்கள் சக்தியின் காரியாலயம் திறந்து வைப்பு

சாதனை

இவ்வரலாற்று வெற்றியை பெற்றுத் தந்த மாணவர்களுக்கும் மாணவர்களை பயிற்றுவித்து அழைத்துச்சென்ற கல்லூரியின் விளையாட்டு துறை பொறுப்பாசிரியர் எம்.ஐ.எம்.அமீர் , எம்.வை.எம்.றகீப் பயிற்சி வழங்கிய எம்.பைஸருக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.

அகில இலங்கை தேசிய மட்ட போட்டியில் கல்முனை சாஹிரா கல்லூரி வரலாற்றுச் சாதனை | Islamic Cultural Competition Zahira College Win

இந்த வெற்றிக்காக உறுதுணையாய் இருந்த மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து ஆலோசனை, வழிகாட்டல்களையும் வழங்கி ஊக்கப்படுத்திய கல்லூரி முதல்வர் எம்.ஐ.ஜாபிர்  மற்றும் பிரதி, உதவி அதிபர்கள், போட்டிகளில் பங்கேற்க தேவையான உதவிகளை மேற்கொண்ட பாடசாலை நிர்வாகம், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு மற்றும் பழைய மாணவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துள்ளனர். 

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் நடவடிக்கைகளை அங்கீகரிப்பதாக அறிவித்துள்ள பிரித்தானியா

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் நடவடிக்கைகளை அங்கீகரிப்பதாக அறிவித்துள்ள பிரித்தானியா

ரணிலை பகிரங்க விவாதத்துக்கு அழைக்கும் அநுர!

ரணிலை பகிரங்க விவாதத்துக்கு அழைக்கும் அநுர!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW