ஈரான் அரசினால் வெளியிடப்பட்ட கடுமையான எச்சரிக்கை

Iran Middle East Israel-Iran conflict
By Rakshana MA Jun 23, 2025 11:30 AM GMT
Rakshana MA

Rakshana MA

மத்திய கிழக்கில் நிலவும் பதட்டமான சூழ்நிலையை மேலும் தீவிரமாக்கும் வகையில், ஈரான் அரசு தற்போது மிகக் கடுமையான எச்சரிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

ஈரானின் அரச தொலைக்காட்சியில் நேரலை பிரதான நேர ஒளிபரப்பின் போது, புரட்சி காப்புப்படையின் உயர் தரமுடைய ஒரு கட்டளை அதிகாரி, "இப்போது தொடங்கி, மத்திய கிழக்கில் உள்ள எந்த அமெரிக்கரும் பாதுகாப்பாக இல்லை" என அறிவித்தார்.

தொடர்ந்தும் அவர் பேசும்போது, அமெரிக்க இராணுவத்தளங்களைக் குறிக்கும் ஒரு வரைபடத்தின் முன் நின்று, ஈரானின் புதிய நிலைப்பாட்டை உறுதியாக வெளியிட்டார்.

இஸ்ரேல் - ஈரான் மோதலில் ரஷ்யா மௌனம் காப்பது ஏன்?

இஸ்ரேல் - ஈரான் மோதலில் ரஷ்யா மௌனம் காப்பது ஏன்?

கடுமையான எச்சரிக்கை

குறிப்பாக, இராக்கு, சிரியா மற்றும் பெர்சிய விரிகுடா பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத்தளங்கள் குறிப்பிட்டவையாக உள்ளன.

இவ்விடங்களில் ஆயிரக்கணக்கான அமெரிக்க இராணுவத்தினர் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் தற்போது பணியாற்றி வருகின்றனர்.

இந்த விடயமானது, வெறும் வார்த்தைகளல்ல இது நேரடி எதிர்ப்போராட்டத்தின் ஆரம்ப அடையாளம் என உலக நாடுகள் அச்சத்திலுள்ளன.

இந்த எச்சரிக்கை மூலம், ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான முற்போக்கு இன்னும் மோசமான நிலைக்கு செல்கிறது. இந்நிலையில், சர்வதேசம் முழுவதும் இது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிகரிக்கும் மரக்கறியின் விலை..! பாதிக்கப்படும் பொது மக்கள்

அதிகரிக்கும் மரக்கறியின் விலை..! பாதிக்கப்படும் பொது மக்கள்

மக்களை ஏமாற்றி விற்கப்படும் முட்டைகள்! புதிய திட்டம் அறிமுகம்

மக்களை ஏமாற்றி விற்கப்படும் முட்டைகள்! புதிய திட்டம் அறிமுகம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW