இஸ்ரேல் - ஈரான் மோதலில் ரஷ்யா மௌனம் காப்பது ஏன்?
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ரஷ்யா (Russia) தொடர்ந்து அமைதி காத்திருப்பது தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இதில் தனது நிலைப்பாட்டை விளக்கியுள்ளார்.
இஸ்ரேல் - ஈரான் மோதலில் அமெரிக்கா நேரடியாக தலையீடு செய்த பின்னரும், ரஷ்யா எந்தவிதமான கள நடவடிக்கையிலும் ஈடுபடாமல் அமைதியாக இருக்கிறது.
பின்வாங்கும் ரஷ்யா
இதனால், ஈரானுக்கு நெருக்கமான நட்பு நாடாக இருந்தும், ஏன் ரஷ்யா ஒதுங்கி நின்றுள்ளது? என்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கான பதிலாக புடின் கூறியதாவது: "சோவியத் ஒன்றியம் மற்றும் ரஷ்ய கூட்டமைப்பிலிருந்து சுமார் 20 இலட்சம் பேர் இப்போது இஸ்ரேலில் வாழ்ந்து வருகின்றனர்.
இஸ்ரேல் ஒரு வகையில் ரஷ்ய மொழி பேசும் பகுதியாகவே மாறியுள்ளது. இது ரஷ்யாவின் வரலாற்றின் ஒரு பகுதியாகவும் பார்க்கப்படுகிறது. இதனால், இந்நிலையில் நாங்கள் நடுநிலைமைக்கு முக்கியத்துவம் தருகிறோம்" என்று தெரிவித்தார்.
மேலும், ரஷ்யா தனது முஸ்லிம் நட்பு நாடுகளிடம் விசுவாசமாக இல்லை என்று எழும் விமர்சனங்களுக்கு பதிலளித்த அவர், "இதைச் சொல்லும் சிலர் தேவையின்றி பிரச்சினையை உருவாக்க முயலுகிறார்கள்.
ரஷ்யாவில் முஸ்லிம் மக்கள்
ரஷ்யா பல ஆண்டுகளாகவே அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளுடன் நெருக்கமான உறவைக் கொண்டுள்ளது. எங்களின் மக்கள் தொகையில் 15% பேர் முஸ்லிம்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பில் (OIC) ரஷ்யா பார்வையாளராகவும் உள்ளதே” என்றார்.
இந்த வகையில், ரஷ்யா தற்போது எடுத்துள்ள நிலைபாடு, தனது இருதரப்புச் சொந்தங்களை ஒத்திசைக்க முயலும் ஒரு நடுநிலை ஒழுங்குமுறையாகவே பார்க்கப்படுகிறது என உலக நாடுகள் கணிப்பிடுகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |