அமெரிக்காவின் தாக்குதலுக்கு நட்டஈடு கோரும் ஈரான்!

United States of America Iran Iran-Israel War
By Rakshana MA Jun 26, 2025 04:29 AM GMT
Rakshana MA

Rakshana MA

அண்மையில் அமெரிக்கா (America) நடத்திய தாக்குதலில் ஈரானின் முக்கிய அணுசக்தி மையங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன என ஈரான் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

2025 மே 21ஆம் திகதி, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதலின் போது, இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா தாக்குதலில் ஈடுபட்டது.

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் மோசமான செயல்..! 22 மாணவர்கள் இடைநீக்கம்

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் மோசமான செயல்..! 22 மாணவர்கள் இடைநீக்கம்

அணுச்சக்தி மீதான தாக்குதல்கள் 

அந்த தாக்குதலின் போது, ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் உள்ளிட்ட முக்கிய அணுசக்தி மையங்கள் குறிவைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் தாக்குதலுக்கு நட்டஈடு கோரும் ஈரான்! | Iran Nuclear Sites Attacked By Usa

இதுகுறித்து ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகி, “எங்கள் தேசத்தின் அணுசக்தி மையங்கள் மிக மோசமாக சேதமடைந்துள்ளன.

அமெரிக்கா இதற்கான இழப்பீட்டை வழங்க வேண்டியது அவசியம். இல்லையெனில், ஐக்கிய நாடுகள் அமைப்பில் (UN) அதிகாரப்பூர்வ புகார் அளிக்கப்படும்,” என எச்சரிக்கை விடுத்தார்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதி செய்திருந்தார்.

மனைவியின் முனைவர் பட்ட விழா : சர்ச்சைக்குள் சிக்கிய ரணில்

மனைவியின் முனைவர் பட்ட விழா : சர்ச்சைக்குள் சிக்கிய ரணில்

பதற்றமான சூழ்நிலை

இதேவேளை, ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் துணை அமைச்சர் சயீத் கதிப்சாதே, “இஸ்ரேல் தற்போது தாக்குதல்களை நிறுத்தியுள்ளது.

அமெரிக்காவின் தாக்குதலுக்கு நட்டஈடு கோரும் ஈரான்! | Iran Nuclear Sites Attacked By Usa

ஆனால் போர்நிறுத்தம் குறித்து எதுவும் எழுத்துப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்படவில்லை,” என லெபனானை சேர்ந்த ஒரு ஊடக நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் மத்திய கிழக்கு பகுதியில் மீண்டும் பதற்றமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

மத்தியகிழக்கு மோதல் : இலங்கையில் அவசர நடவடிக்கை எடுக்க நியமிக்கப்பட்ட குழு!

மத்தியகிழக்கு மோதல் : இலங்கையில் அவசர நடவடிக்கை எடுக்க நியமிக்கப்பட்ட குழு!

மட்டக்களப்பு கொடூர கொலை வழக்கில் இரட்டை சகோதரிகள் கைது!

மட்டக்களப்பு கொடூர கொலை வழக்கில் இரட்டை சகோதரிகள் கைது!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW