மத்தியகிழக்கு மோதல் : இலங்கையில் அவசர நடவடிக்கை எடுக்க நியமிக்கப்பட்ட குழு!
மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர் சூழ்நிலையில் இலங்கை எதிர்கொள்ளும் சவால்களை ஆராய்ந்து அவசர நடவடிக்கை எடுக்க அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டு அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அவசர நடவடிக்கை
அதன்படி, மத்திய கிழக்கில் போர் நிலைமையை உன்னிப்பாக ஆய்வு செய்து, பாதிக்கப்படக்கூடிய அனைத்து பகுதிகள், தாக்கத்தின் அளவு மற்றும் இது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து மறுஆய்வு செய்ய இந்த அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த உபகுழுவுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக ஏற்புடைய அமைச்சுக்களின் செயலாளர்களுடன் கூடிய குழுவொன்றை நியமிப்பதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
விஜித ஹேரத் - வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்
சமந்த விதயாரத்ன - பெருந்தோட்டத்துறை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர்
வசந்த சமரசிங்க - வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்
(பொறியியலாளர்) குமார ஜயகொடி - வலுசக்தி அமைச்சர்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |