ஆட்சி அமைப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல்
கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலினை தொடர்ந்து இறக்காமம், பொத்துவில் ஆகிய பிரதேச சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது, நேற்று (25) புணானை ஐசிஎஸ்டி வளாகத்தில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்(Rauf Hakeem) தலைமையில் நடைபெற்றுள்ளது.
விசேட கலந்துரையாடல்
இந்த கலந்துரையாடலில், அந்த கட்சியின் செயலாளர் எம்.நிசாம் காரியப்பர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், திகாமாடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை, பிரதித் தலைவர் எம்.ஐ.எம்.மன்சூர், கட்சியின் அம்பாறை மாவட்டச் செயலாளர் ஏ.சீ.சமால்தீன், உயர்பீட உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் உறுப்பினர்கள், உயர்பீட உறுப்பினர்கள் ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


