இறக்குமதியான வாகனங்கள் மீள் ஏற்றுமதியா..! வெளியான பின்புலம்
நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு இணங்க வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசாங்கம் விதித்துள்ள விதிமுறைகளை மீறி, போலியான உற்பத்தி திகதிகளை பதிவு செய்து இலங்கைக்கு வாகனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மீள் ஏற்றுமதி
இந்நிலையில், இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 196 வாகனங்களை மீள் ஏற்றுமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பொய்யானது.
அத்துடன், நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு இணங்க வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. மீள் ஏற்றுமதிக்கான எந்த தயாரிப்புகளும் இல்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இலங்கையில் ஐந்து வருடங்களுக்குப் பிறகு புதிய வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |