தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள முக்கிய எச்சரிக்கை

Election Commission of Sri Lanka Sri Lanka Police Investigation Sri Lanka Presidential Election 2024 sl presidential election
By Laksi Sep 19, 2024 07:21 AM GMT
Laksi

Laksi

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு தினத்தன்றும் வைக்களிப்பின் பின்னரும் அநாவசியமாக வெளியில் நடமாடுவதை தவிர்த்து வீடுகளிலேயே இருக்குமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அத்தோடு, அவசியமின்றி பெரிய திரைகளில் தேர்தல் முடிவுகளை அவதானிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு ஒன்றுகூடி தேர்தல் முடிவுகளை பார்வையிட்டு மகிழ்ச்சி கொண்டாட்டங்களில் ஈடுபட்டால் அவர்களை கைதுசெய்ய பொலிஸார் நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் மீது பொலிஸார் விசேட அவதானம்

சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் மீது பொலிஸார் விசேட அவதானம்

அவசர நிலைமை

இதனையடுத்து, இந்த நடைமுறைகளை பின்பற்ற அவசர நிலைமைகளில் முப்படையினர் அழைக்கப்படுவார்கள் எனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள முக்கிய எச்சரிக்கை | Important Announcement From Election Commission

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலின் வாக்களிப்பிற்கு பின்னரான வன்முறைகள் குறித்து பதற்றமடைவதை பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மதுபான விற்பனை தொடர்பில் கலால் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு

மதுபான விற்பனை தொடர்பில் கலால் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு

தேர்தல் கால வானிலை குறித்து வெளியான அறிவிப்பு!

தேர்தல் கால வானிலை குறித்து வெளியான அறிவிப்பு!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW