இந்தியாவிலிருந்து உப்புடன் வரும் கப்பல்
Sunil Handunnetti
Sri Lanka
India
Import
By Rakshana MA
இறக்குமதி செய்யப்படும் ஒரு தொகுதி உப்புடன், இந்திய கப்பல் ஒன்று எதிர்வரும் 28ஆம் திகதி இலங்கைக்கு வர உள்ளது.
கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி(Sunil Handunneththi) இதனை அறிவித்துள்ளார்.
உப்பு பற்றாக்குறை
புத்தளம் உப்பு தொழிற்சாலைக்கு நேற்று(19), ஆய்வு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பின்னர் ஊடகங்களிடம் பேசிய போது மேலுள்ளவாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நிலவும் உப்பு பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த இறக்குமதி மேற்கொள்ளப்படுகிறது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதற்ற நிலையும் உப்பு இறக்குமதி தாமதத்துக்கு ஒரு காரணமாக அமைந்ததாக அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |