அநுராதபுரத்தில் சட்டவிரோதமாக டீசல் விற்பனை செய்த நபர் ஒருவர் கைது

Anuradhapura Sri Lanka Police Investigation Crime
By Laksi Oct 18, 2024 07:33 AM GMT
Laksi

Laksi

அநுராதபுரம் - கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் டீசல் விற்பனை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அநுராதபுரம் விமானப்படை புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

விசேட அதிரடிப்படையின் தம்புள்ளை முகாமை சேர்ந்த அதிகாரிகள் குழு ஒன்று கலென்பிந்துனுவெவ, மொரகொட மீகஸ்வெவ, நாமல்புர பிரதேசத்தில் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளது.

இறக்குமதி பொருட்கள் சிலவற்றின் வரி அதிகரிப்பு

இறக்குமதி பொருட்கள் சிலவற்றின் வரி அதிகரிப்பு

மேலதிக விசாரணை

இதன்போது, பாதுகாப்பற்ற முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 1,225 லீட்டர் டீசல் மற்றும் அது தொடர்பான உபகரணங்களுடன் அதே பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அநுராதபுரத்தில் சட்டவிரோதமாக டீசல் விற்பனை செய்த நபர் ஒருவர் கைது | Illegal Diesel Sale Suspect Arrested

இந்த நிலையில் சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மொரகொட காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

போலி செய்திகளில் உள்ள இணைப்புக்களை கிளிக் செய்ய வேண்டாம்: மக்களுக்கு எச்சரிக்கை

போலி செய்திகளில் உள்ள இணைப்புக்களை கிளிக் செய்ய வேண்டாம்: மக்களுக்கு எச்சரிக்கை

சந்தையில் அரிசி, தேங்காய் விலை தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு

சந்தையில் அரிசி, தேங்காய் விலை தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW