அம்பாறை மாவட்ட செயலகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு
அம்பாறை மாவட்ட செயலகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்ரம தலைமையில் மாவட்ட செயலக முன்றலில் நேற்று(24) நடைபெற்றுள்ளது.
மாவட்ட செயலக முஸ்லிம் மஜ்லிஸின் நெறிப்படுத்தலிலும் ஒழுங்குபடுத்தலிலும் குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
சமூக நல்லிணக்க இப்தாராக இடம்பெற்ற இந்நிகழ்வில் நோன்பின் மாண்புகளை பற்றி மௌலவி சஹ்றான் ஹஸன்(அன்வாரி) மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளார்.
இப்தார் நிகழ்வு
மேலும், இந்த நிகழ்வில் திகவாபி விகாராதிபதி பேதி வேல சந்தானந்த நாயக்க, கல்முனை சிவஸ்ரீ க.வி பிரமின் குருக்கள், அம்பாறை மேதடிஸ் ஆலய அருட் தந்தை ரோகான் அப்பு காமி உட்பட மத போதகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அத்துடன், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஜெகராஜன், அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.ஜி.டி.எஸ். அமரசிங்க, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஏ முனாசீர், இராணுவ உயர் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |









