புத்தளத்தில் மனைவியை துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்தய கணவன் கைது
Sri Lankan Peoples
Eastern Province
Crime
Gun Shooting
By Rakshana MA
புத்தளம் - சிலாபம்(Chilaw) பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விலத்தவ பிரதேசத்தில் மனைவியைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டு உயிரை மாய்க்க முயன்ற கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (16) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
விசாரணை
குடும்பத்தகராறு காரணமாக கணவன் தனது மனைவியைத் துப்பாக்கியால் சுட்டுக் காயப்படுத்தியுள்ளார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவத்தையடுத்து கணவன் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றுள்ள நிலையில் பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |