இருதய நோய் தொடர்பில் அதிர்ச்சி தகவல்
இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் 60,000 பேர் இறப்பதற்கு இருதய நோய் முக்கிய காரணமாக அமைந்துள்ளது என இருதயநோய் மூத்த ஆலோசகர் கோட்டாபய ரணசிங்க தெரிவித்துள்ளார்.
அதில் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இதய செயலிழப்பு போன்ற நிலைமைகளும் அடங்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் இதய நோய்கள் 15 வீதமாக அதிகரித்துள்ளதாகவும், இருதயம் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக தினமும் 200 நோயாளிகள் வைத்தியசாலைகளுக்கு வருவதாகவும் ரணசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இருதய நோய்க்கான காரணி
இருதயம் தொடர்பான பிரச்சினைகளுடன் தொடர்புடைய காரணிகளாக, மோசமான உணவுமுறை, உடற்பயிற்சியின்மை மற்றும் மன அழுத்தம் என்பனவற்றை கூறமுடியும்.
இருப்பினும், ஆரம்பகால தடுப்பு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை தேர்வுகள் இருதய நோய்கள் உருவாகும் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கும் என்று குறிப்பிட்டுள்ள அவர், குறிப்பாக இளைஞர்களிடையே அதிகரித்து வரும் இருதய நோய்கள் குறித்து கவலை வெளியிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |