ஏறாவூரில் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிய மூவர் கைது
Sri Lanka Police
Sri Lankan Peoples
Eastern Province
By Rakshana MA
மட்டக்களப்பு - ஏறாவூர்(Eravur) பிரதேசத்தில் வீதிகளில் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் 3 பேரை ஏறாவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று (08) அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது 151 சுவரொட்டிகளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
பொலிஸார் நடவடிக்கை
மேலும், வீதிகளில் சுவரொட்டிகளை ஒட்டுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |