வாழைச்சேனை ஓமனியாமடுவில் மீட்கப்பட்டுள்ள கைக்குண்டு
Sri Lanka Police
Batticaloa
Sri Lanka Police Investigation
Eastern Province
By Rakshana MA
மட்டக்களப்பு (Batticaloa) - வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓமனியாமடு பிரதேசத்தின் காணி ஒன்றில் இருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.
இந்த கைக்குண்டானது நேற்று(11) மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
குறித்த காணியில் துப்பரவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கைக்குண்டு ஒன்று இனங்காணப்பட்டதையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கைக்குண்டை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |