மஹியங்கனை துப்பாக்கிச் சூடு தொடர்பில் வெளியான உண்மைகள்

Sri Lankan Peoples Eastern Province Death Gun Shooting
By Rakshana MA Apr 16, 2025 12:00 PM GMT
Rakshana MA

Rakshana MA

புதிய இணைப்பு 

மஹியங்கனை, தொடங்வத்த பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மேலும் பல உண்மைகள் வெளிவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மஹியங்கனை நகரத்தில் உள்ள குழுக்களுக்கும் மஹியங்கனையில் உள்ள தோடம்வத்தே கிராமத்தில் உள்ள ஒரு குழுவிற்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வந்த மோதலின் விளைவாக நேற்று இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.

மஹியங்கனையில் நேற்று நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இரு குழுக்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் விளைவாக இந்த தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பானம கடலலையில் அடித்து செல்லப்பட்ட இரு இளைஞர்கள் மாயம்

பானம கடலலையில் அடித்து செல்லப்பட்ட இரு இளைஞர்கள் மாயம்

உண்மைகள்...

பின்னர், மஹியங்கனை நகரத்தைச் சேர்ந்த குழு, தோடம்வத்தே கிராமத்தில் உள்ள 20 வீடுகள் கொண்ட பகுதிக்குச் சென்று, அங்கிருந்த மக்களைத் தாக்கியுள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டையும் நடத்தியுள்ளது.

இருப்பினும், ஒருவர் சுடப்பட்டு காயமடைந்ததாகவும், அவர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுடன் வந்தவர்களில் ஒருவர் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.

மஹியங்கனை துப்பாக்கிச் சூடு தொடர்பில் வெளியான உண்மைகள் | Gun Shoot At Mahiyangana

இதற்கிடையில், கம்பஹா பேருந்து நிலையத்திற்கு அருகில் சாலையில் பயணித்த லொரியை குறிவைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் இன்று துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இந்த நிலையில், லொரி கவிழ்ந்துள்ளது. எனினும், அதில் பயணித்தவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த துப்பாக்கிச் சூடு, அவிஷ்கவின் உறவினரை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதல் என்று பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

அவிஷ்க, சமீபத்தில் அளுத்கடே நீதிமன்ற வளாகத்திற்குள் படுகொலை செய்யப்பட்ட சஞ்சீவ குமார சமரரத்னவின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்.

சஞ்சீவ குமாரவின் கொலைக்குப் பழிவாங்கும் நோக்கில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் சந்தேகிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

தங்க விலையில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்

தங்க விலையில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்

முதலாம் இணைப்பு 

மஹியங்கனை(Mahiyangana) - கெவல் விஸ்ஸ பகுதியில் நேற்றைய தினம்(15) துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர், தொடர்ந்தும் மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் 51 வயதுடைய மஹியங்கனை - தம்பராவ பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மக்களின் காணிகளுக்கு ஆளும் தரப்புக்களால் நேர்ந்த கதி!

கிழக்கு மக்களின் காணிகளுக்கு ஆளும் தரப்புக்களால் நேர்ந்த கதி!

துப்பாக்கிச் சூடு

இரு தரப்பினருக்கு இடையிலான வாக்குவாதம் முற்றிய நிலையில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

மஹியங்கனை துப்பாக்கிச் சூடு தொடர்பில் வெளியான உண்மைகள் | Gun Shoot At Mahiyangana

குறித்த சம்பவம் தொடர்பில் 55 வயதுடைய ஒருவர், சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்டதெனக் கருதப்படும் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

திருகோணமலையில் மோட்டார் சைக்கிள் விபத்து : ஒருவர் பலி

திருகோணமலையில் மோட்டார் சைக்கிள் விபத்து : ஒருவர் பலி

திருகோணமலையை இலக்கு வைத்து இரகசிய நகர்வுகள்...!

திருகோணமலையை இலக்கு வைத்து இரகசிய நகர்வுகள்...!

           நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW