சம்மாந்துறையில் மண்ணில் புதையுண்ட நிலையிலிருந்த கைக்குண்டு மீட்பு

Sri Lanka Police Ampara Sri Lanka Sammanthurai
By Rakshana MA Oct 22, 2024 07:07 AM GMT
Rakshana MA

Rakshana MA

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடு ஒன்றில் நேற்று (21) மாலை கட்டட வேலைக்காக கொட்டப்பட்ட மண்ணில் புதையுண்ட நிலையில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கட்டட வேலையில் ஈடுபட்ட வேலையாட்கள் 119 எனும் பொலிஸ் அவசர பிரிவுக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து கைக்குண்டானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்ட மக்களுக்கு குடிநீர் தொடர்பாக விசேட அறிவித்தல்

கம்பஹா மாவட்ட மக்களுக்கு குடிநீர் தொடர்பாக விசேட அறிவித்தல்

செயலிழக்கச்செய்யப்பட்ட முயற்சி

சம்பவ இடத்திற்கு விரைந்த சம்மாந்துறை பொலிஸார் கைக்குண்டை பார்வையிட்டதுடன் குண்டு செயலிழக்க செய்யும் விசேட அதிரடி படையினர் மற்றும் குற்ற தடயவியல் பொலிஸாருக்கு தகவல்கள் தெரிவித்துள்ளனர்.

சம்மாந்துறையில் மண்ணில் புதையுண்ட நிலையிலிருந்த கைக்குண்டு மீட்பு | Grenade Recovered From Soil Buried Sammanthurai

மீட்கப்பட்ட கைக்குண்டை அவ்விடத்தில் இருந்து அகற்றி செயலிழக்க செய்வதற்காக இன்று (22) சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற அனுமதியினைப் பெற்றுள்ளனர்.

மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் உதய கம்மன்பில வெளியிட்டுள்ள தகவல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் உதய கம்மன்பில வெளியிட்டுள்ள தகவல்

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 439 முறைப்பாடுகள் பதிவு

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 439 முறைப்பாடுகள் பதிவு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGallery