சாய்ந்தமருதுவில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட அரசாங்கத்தின் திட்டம்
இலங்கை அரசாங்கத்தினால் முன“னெடுக்கப்பட்ட கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் திண்மக் கழிவுகளை பூரணமாக அகற்றுதல் மற்றும் கடற்கரை பிரதேசத்தை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இது நேற்று(01) மாநகர சபை ஆணையாளர் ஏ.ரீ.எம். றாபி தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அரசாங்கத்தின் திட்டம்
மேலும், மாநகர ஆணையாளர் ஏ.ரீ.எம். றாபி இதன்போது கருத்து தெரிவிக்கையில்,
இந்த வேலைத்திட்டத்தினை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா, உதவி ஆணையாளர் ஏ.எம்.அஸீம், பொறியியலாளர் ஏ.ஜே.எம்.ஜெளசி உள்ளிட்ட மாநகர சபையின் சகல உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் நன்றிகள்.
அத்துடன், தொடர்ந்தும் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட ஏனைய பிரதேசங்களிலும் இந்த வேலைத்திட்டம் தொடராக முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த வேலைத்திட்டம் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவாவின் பங்குபற்றலுடன் ஆரம்பமானது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |