இலங்கையர்களுக்கான அவுஸ்திரேலிய விருதுகள் புலமைப்பரிசில்! முழு விபரம்
2026 ஆம் ஆண்டுக்கான அவுஸ்திரேலிய விருதுகள் உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த மதிப்புமிக்க புலமைப்பரிசில்கள் இலங்கை உட்பட தகுதியுள்ள நாடுகளைச் சேர்ந்த சிறந்த நபர்களுக்கு, முன்னணி அவுஸ்திரேலிய நிறுவனங்களில் உயர் கல்வியைத் தொடர வாய்ப்பளிக்கின்றன.
புலமைப்பரிசில் திட்டம்
மேலும், இந்தத் திட்டமானது தங்கள் நாடு திரும்பியதும், தங்கள் நாடுகளின் வளர்ச்சிக்குப் பங்களிக்கும் எதிர்காலத் தலைவர்களை உருவாக்குவதற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், விண்ணப்பதாரர்கள் பல்வேறு துறைகளில் இளங்கலை அல்லது முதுகலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் உள்நழையும் தகுதி, விண்ணப்ப வழிகாட்டுதல்கள் மற்றும் கூடுதல் விபரங்களைப் பார்க்க https://rb.gy/mewctl ஐப் பார்வையிடலாம்.
மேலும், விண்ணப்பிப்பதற்கான கடைசி திகதி புதன்கிழமை, 30 ஏப்ரல் 2025.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |