ஓய்வூதியர்களுக்கான மகிழ்ச்சி தகவல் - திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை

Government Of Sri Lanka Economy of Sri Lanka
By Rakshana MA Oct 17, 2024 01:06 PM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கை ஜனாதிபதி அலுவலகத்தினால் அரச ஊழியர்களுக்கு 3000 ரூபா கொடுக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஓய்வூதியத் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஓய்வூதியர்களுக்கான பணத்தொகையை நேற்று (16) முதல் வழங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகள்

இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகள்

பண வைப்பிலிடல்

அனைத்து பொது மற்றும் தனியார் வங்கிகளில் ஓய்வூதியம் பெறும் ஊழியர்களுக்கான பணம் வங்கிக்கணக்கில் வைப்பிலிடப்படும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

ஓய்வூதியர்களுக்கான மகிழ்ச்சி தகவல் - திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை | Government Pension Funds In Your Account Tomorrow

மேலும் தபால் நிலையங்களில் மற்றும் துணை அலுவலகங்களில் ஓய்வூதியத்தை பெறும் அரச ஊழியர்கள் நாளை (18) முதல் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

உத்தேச மாதாந்த இடைக்கால கொடுப்பனவான 3000 ரூபாய் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பில் அவதானித்த ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க,

ஓய்வூதியம் பெறுவோருக்கு தேவையான நிதியை திறைசேரியிலிருந்து விடுவிக்குமாறு உத்தரவிட்டிருந்தார் .

திறைசேரி நிதி

இவ் உத்தரவுக்கு அமைய திறைசேரியானது ஓய்வூதியத் திணைக்களத்திற்கு தேவையான தொகையை ஒதுக்கீடு செய்துள்ளதுடன், இது ஓய்வூதியதாரர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

ஓய்வூதியர்களுக்கான மகிழ்ச்சி தகவல் - திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை | Government Pension Funds In Your Account Tomorrow

24 ஆகஸ்ட் 2024 அன்று வெளியிடப்பட்ட பொது நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 02/2024, மாதாந்திர இடைக்கால கொடுப்பனவுக்காக கோரப்பட்ட போதிலும், நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

மேலும் கடந்த 14ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து, கருவூல செயல்பாட்டுத் துறை இம் மாதம் 679,960 ஓய்வூதியதாரர்களுக்கு 2,021 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதன் விளைவாக ஓய்வூதியத் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் இந்த கொடுப்பனவை வழங்கத் தொடங்கியுள்ளது.

400 பில்லியன் ரூபா கடன் பெற்றுள்ள புதிய அரசாங்கம்: வெளியான தகவல்

400 பில்லியன் ரூபா கடன் பெற்றுள்ள புதிய அரசாங்கம்: வெளியான தகவல்

இலங்கையில் வாழும் சிறுவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் வாழும் சிறுவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW