தங்கத்தின் சடுதியான அதிகரிப்பிற்கு வெளியான காரணம்
இலங்கையில் இந்த வருடத்தில் மட்டும் தங்கத்தின் விலை சுமார் 60,000 ரூபாய் அதிகரித்துள்ளதாக தேசிய இரத்தினக்கல், ஆபரணங்கள் அதிகாரசபை தகவல் வெளியிட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வரிக் கொள்கையால் கடந்த வாரத்தில் மட்டும் தங்கத்தின் விலை சுமார் 15,000 ரூபாய் அதிகரித்துள்ளதாக சபையின் உதவிப் பணிப்பாளர் இந்திக்க பண்டார தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஒரு வார காலப்பகுதியில் மட்டும் தங்கத்தின் பாரியளவில் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தங்கத்தின் விலை
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த வருடத்தின் 4 மாதங்களில் 60000 ரூபாய் வரை தங்கத்தின் விலை அதிகரிப்பதற்கு பிரதான காரணமாக உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பாகும்.
அத்தோடு தங்கத்தின் கேள்வி அதிகரித்துள்ளமையினால் தங்கத்தின் விலை அதிகரித்து வருகின்றது.
மத்திய வங்கி
இதேவேளை, இந்த ஆண்டு இறுதிக்குள் உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை சுமார் 4,000 அமெரிக்க டொலர்களாக உயரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் தங்கத்தின் விலை குறைய வேண்டுமெனில் நாட்டின் மத்திய வங்கி தங்க இருப்புக்களை வெளியிட வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |