மூதூரில் வாய்க்காலுக்குள் தடம் புரண்டு வீழ்ந்த கார்
Trincomalee
Sri Lankan Peoples
Eastern Province
Accident
By Rakshana MA
மூதூர் (Mutur) பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இருதயபுரம் வாய்க்காலுக்குள் காரொன்று தடம் புரண்டு வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த சம்பவம் திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் நேற்று (21) மாலை இடம்பெற்றுள்ளது.
வேகக் கட்டுப்பாடு
குறித்த விபத்தில் காரின் சாரதி சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்முனையிலிருந்து - திருகோணமலை நோக்கி பயணித்த குறித்த காரில் ஏற்பட்ட திடீர் பழுது காரணமாக காரானது வேகக் கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள வாய்க்காலினுள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

